வண்ண வண்ணமாய்
கூட்டங்கள்,
கவலையை மறந்திட சிலபேர்
மகிழ்ச்சியை பங்கிட சிலபேர்
குடும்பத்துடன் சிலபேர்
குடும்பங்கள் ஆகப்போகிற சிலபேர்
நண்பர்களுடன் சிலபேர் என
உன்னை நோக்கி தினமும்...
எங்கே உனது தொடக்கம்,
எங்கே உனது முடிவு என
அறிந்தவர் யாவருமிழர்...
உனது பரந்த விரிந்த எல்லையைப் போலவே
உந்தன் மனதோ ?
உன்னை நோக்கி வருமனைவருக்கும்
சந்தோசத்தை மட்டுமே கொடுக்கிறாயே,
யார் கற்றுக் கொடுத்தது
தாயா, தந்தையா அல்ல மூததையாரா
உனக்கு,
உனைகாணவரும் எம்மக்களுக்கும் சொல்லிகுடு
அந்த ரகசியத்தை,,
எப்படி அனைவரையும் சந்தோசமாய்
வைத்துக்கொள்வது என்று.....
very nice da.. i like this poem
ReplyDeletethanks da...
ReplyDelete